கர்நாடகாவின் ஹம்பியில் உள்ள நாடோடி வாழ் லம்பானிச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் பூத்தையல் போடப்பட்ட துணிகளைத் தயாரித்துப் புதிய கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர்.
G20 கலாச்சாரப் பணிக் குழுவின் கூட்டத்தில், சுமார் 450 லம்பானிக் கைவினைஞர்கள் தங்களின் சிறப்பானத் திறன்களையும் கைவினைத் திறனையும் வெளிப்படுத்தினர்.
அவர்கள் 1,755க்கும் மேற்பட்ட தனித்துவமான துணிகள் கொண்ட ஒரு வியக்கத்தக்கத் தொகுப்பினை உருவாக்கியுள்ளனர்.
லம்பானிப் பூத்தையல் என்பது ஜவுளி அலங்காரத்தில் பல வண்ணமிகு நூலிழைகள், கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட மற்றும் பல்வேறு தையல் வடிவங்களின் கோர்வையான ஒரு வண்ணமிகு மற்றும் சிக்கலான ஒரு வடிவமாகும்.
கர்நாடகாவின் சந்தூர், கேரி தண்டா, மாரியம்மனஹள்ளி, கதிரம்பூர், சீதாராம் தண்டா, பிஜப்பூர் மற்றும் கமலாபூர் போன்ற பல்வேறு கிராமங்களில் இது தயாரிக்கப் படுகிறது.