குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கய்யா நாயுடு அவர்கள், 2வது லால்பகதூர் சாஸ்திரி சிறந்த பணிக்கான தேசிய விருதுகளை வழங்கினார்.
இந்த விருதானது புகழ் பெற்ற நுரையீரல் மருத்துவரும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் ரன்தீப் குலேரியா என்பவருக்கு வழங்கப்பட்டது.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் நுரையீரல் மருத்துவத் துறை மற்றும் தூக்கமின்மை கோளாறுகள் போன்றவற்றில் மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கான அவரது பணிகள் போன்றவற்றினையும் வெங்கய்யா நாயுடு பாராட்டினார்.