ஒடிசா மாநில அரசானது 350 ஆண்டு கால பழமையான கட்டமைப்பு கொண்ட, 11வது நூற்றாண்டைச் சேர்ந்த லிங்கராஜா ஆலயத்தைப் புதுப்பிக்க முடிவு செய்து உள்ளது.
மேலும், அம்மாநில அரசானது அந்த ஆலயம் மற்றும் பிந்துசாகர் ஏரி ஆகியவற்றிற்கிடையே ஒரு தடையற்ற வகையிலான போக்குவரத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்து உள்ளது.
11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த லிங்கராஜா ஆலயமானது சிவன் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இது புவனேஸ்வர் நகரின் மிகப்பெரிய ஆலயமாகக் கருதப் படுகின்றது.