TNPSC Thervupettagam
January 11 , 2018 2411 days 769 0
  • நிர்வாகத்தின் அனைத்து பணியிடங்களிலும் பெண் அலுவலர்களை மட்டும் பணியமர்த்தியதற்காக மத்திய இரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த மாதுங்கா (Matunga) புறநகர் இரயில் நிலையம் 2018-ஆம் ஆண்டிற்கான லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
  • முழுவதும் பெண் பணியாளர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் நாட்டின் முதல் இரயில் நிலையமாக மாதுங்கா புறநகர் இரயில் நிலையம் 6 மாதத்திற்கு முன்பு உருவானதைத் தொடர்ந்து தற்போது இந்த ரயில் நிலையம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திலிருந்து இந்திய இரயில்வேயில் முதன்முறையாக, இந்த இரயில் நிலையம் பிரத்யேகமாக பெண் அலுவலர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றது.
  • இந்திய இரயில்வேயின் மும்பை பிராந்தியப் பிரிவு பெண்களுக்கான அதிகாரமளிப்பில் சில முக்கிய சாதனைகளை படைத்துள்ளது.
  • அவையாவன,
    • இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுநராக சுரேகா போஷலே யாதவ் 1988 ஆண்டு மத்திய இரயில்வேயில் நியமிக்கப்பட்டார்.
    • உலகின் முதல் பெண்களுக்கான சிறப்பு புறநகர் இரயில் மேற்கத்திய இரயில்வே மண்டலத்தில் 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்