உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முதலாவது மலையாளப் பெண் வழக்குரைஞரான லில்லி தாமஸ் (91) சமீபத்தில் காலமானார்.
இந்தியாவில் சட்டத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்த முதலாவது பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை தொடர்பான வழக்கைக் கையாண்ட வழக்குரைஞர்களில் லில்லி தாமஸும் ஒருவராவார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8 (4)ஐ நீக்கப் போராடிய இவரது மனுவிற்காக இவர் மிகப் பிரபலமாக அறியப்படுகின்றார்.
2013 ஆம் ஆண்டில் தண்டனை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குத் தானாகவே தகுதி இழக்கச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு அதுவாகும்.
லில்லி தாமஸ் இந்திய தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code - IPC) பிரிவு 494ஐ (கணவன் அல்லது மனைவியின் வாழ்நாளில் மீண்டும் திருமணம் செய்து கொள்வது தொடர்பான) எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.