2019 ஆம் ஆண்டின் பொதுச் சுகாதாரத்திற்கான டாக்டர் லீ ஜோங்-ஊக் நினைவு விருதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையப் பொது இயக்குநரகப் பேராசிரியரான பால்ராம் பார்கவா என்பவர் பெற்றுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற 72-வது உலக சுகாதார சபைக் கூட்டத்தின் போது இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய நோய் நிபுணரான டாக்டர் பார்கவா என்பவருக்கு மருத்துவர், புத்தாக்கவியலாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பற்றி
பொதுச் சுகாதாரத்திற்கான டாக்டர் லீ ஜோங்-ஊக் நினைவு விருதானது 2008 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
பொதுச் சுகாதாரத்திற்கு தலைசிறந்த பங்களிப்பை ஆற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள், அரசு சாரா மற்றும் அரசு சார் அமைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
இவ்விருதானது “நிறுவனரிடமிருந்து” ஒரு கேடயம் மற்றும் 1,00,000 டாலருக்கு அதிகமில்லாத நிதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
WHO-ன் கீழ் வழங்கப்படும் இதர நிரந்தர விருதுகள் பின்வருமாறு