TNPSC Thervupettagam

வங்க தேச இல்லம்

May 28 , 2018 2247 days 653 0
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேசப் பிரதமர் திருமதி.ஷேக் ஹசீனா ஆகியோர் மேற்குவங்க மாநிலத்தின் சாந்தி நிகேதனில் உள்ள விஷ்வபாரதி பல்கலைக்கழகத்தில் வங்கதேச இல்லத்தை தொடங்கி வைத்தனர்.
  • சாந்திநிகேதனில் உள்ள வங்கதேச இல்லமானது, அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தைக் கொண்டிருப்பதோடு நான்கு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

  • மேற்குவங்க மாநிலத்தின் சாந்திநிகேதனில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகமான விஷ்வபாரதி, இரவீந்திரநாத் தாகூரால் 23 டிசம்பர் 1921ல் நிறுவப்பட்டது. தாகூரால் இந்த மத்தியப் பல்கலைக்கழகம் விஷ்வபாரதி என அழைக்கப்பட்டது. விஷ்வ பாரதி என்பதன் பொருள் இந்தியாவுடனான உலகின் தொடர்பு என்பதாகும் .
  • இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் இந்தியப் பிரதமர் ஆவார்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்