TNPSC Thervupettagam

வங்கதேசம் - இடஒதுக்கீடு

April 16 , 2018 2289 days 652 0
  • ஆயிரக்கணக்கான மாணவர்களின் நாடு தழுவிய போராட்டங்களின் காரணமாக வருடாந்திர குடிமைப் பணி தேர்வு மூலம் அரசு அதிகாரிகளை நியமித்தலில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு முறையினை ஒழிப்பதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா அறிவித்துள்ளார்.
  • நடப்பில் வங்கதேசத்தில் பல்வேறு ஒதுக்கீடுகளின் கீழ் வருடாந்திர குடிமைப் பணித் தேர்வுகளில் 56 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
  • அவற்றுள் 30 சதவீதம் எனும் பெரும்பங்கானது சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1971 ஆம் ஆண்டின் டிசம்பர் 16 அன்றான சுதந்திரத்திற்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு வங்கதேச குடிமைப் பணிகளில் இடஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்