TNPSC Thervupettagam

வங்கி வைப்புகளுக்கான காப்பீடு

January 2 , 2020 1662 days 708 0
  • ரூ.1 லட்சத்துக்கும் மேல் வைப்புத் தொகை கொண்ட வங்கிக் கணக்குகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கல் குறித்து  மத்திய நிதி அமைச்சகம் மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை &  மேம்பாட்டு ஆணையம் ஆகியன பரிந்துரைத்துள்ளன.
  • தற்போது, வைப்புத் தொகைக் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகமானது (Deposit Insurance and Credit Guarantee Corporation - DICGC) ரூ.1 லட்சம் மற்றும் அதற்குக் குறைவான வைப்புத் தொகைகளுக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகையைக் கொண்டுள்ளது.
  • வைப்புத் தொகைக் காப்பீடு என்பது பிரீமியத்தைப் பெறுவதன் மூலம் வைப்புத் தொகையாளரின் பணத்திற்கு காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குகின்றது.

DICGC பற்றி

  • ஒரு வங்கி திவாலாகும் நிலையில் அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசாங்கமானது ரிசர்வ் வங்கியின் கீழ் DICGCஐ அமைத்துள்ளது.
  • ஒவ்வொரு காப்பீட்டு வங்கியும் ஒவ்வொரு ஆண்டும் அதன் வைப்புத் தொகைகளில் 0.001% தொகையை  DICGCக்குச் செலுத்துகின்றது.
  • ஒரு வங்கி கலைக்கப் பட்டால், அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் DICGCயிலிருந்து ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெற உரிமை உண்டு.
  • DICGC அமைப்பானது இந்த வகையான பரிவர்த்தனையை நேரடியாக வங்கியின் கணக்கு வைப்பாளர்களுடன் கையாள்வதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்