TNPSC Thervupettagam

வங்கியியல் அல்லாத நிதியியல் நிறுவனங்களின் (NBFC) மீதான ஒழுங்குமுறை

January 31 , 2021 1268 days 578 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) வங்கி அல்லாத நிதியியல் நிறுவனங்களின் (NBFC) வலுவான ஒழுங்குமுறைக்காக 4 நிலை கொண்ட ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • இந்த 4 நிலை கொண்ட அமைப்பானது கீழ் அடுக்கு, மைய அடுக்கு, மேல் அடுக்கு மற்றும் சாத்தியமுள்ள மேல் அடுக்கு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • RBI ஆனது NBFC நிறுவனங்களில் உள்ள கீழடுக்கில் தாமதமாக செலுத்தப்படும் காலத்தைப் பொறுத்து வாராக் கடனின் வகைப்பாட்டை 180 நாட்களிலிருந்து 90 நாட்களாகக் குறைக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • NBFC மீதான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைப் பொறுப்பானது இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 என்ற சட்டத்தின் கீழ் RBI  வசம் உள்ளது.

NBFC பற்றி

  • NBFC என்பது நிறுவனங்கள் சட்டம், 1956 என்ற சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
  • NBFC கோரிக்கை வைப்பு நிதியை ஏற்றுக் கொள்ளாது.
  • மேலும் இவை பணவழங்கீடு மற்றும் தீர்வு முறையின் ஒரு பகுதி அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்