அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தில் 1969 ஆம் ஆண்டில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட முனைவர் பட்ட ஆய்வறிக்கைக்காக புகழ்பெற்று விளங்கும் கணித மேதையான வசிஷ்த நாராயண் சிங் காலமானார்.
ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை எதிர்த்த இவர் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார்.
வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இணைப் பேராசிரியராக இருந்த இவர் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனம் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
அவர் 40 ஆண்டுகள் மனச் சிதைவு நோயினால் அவதிப்பட்டார்.