TNPSC Thervupettagam

வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஆயோக் மன்றம்

February 28 , 2018 2335 days 657 0
  • வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஆயோக் மன்றம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் மற்றும் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர் (Ministry of Development of Northeast Region) ஆகியோர் இம்மன்றத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தில் இதனுடைய செயலகம் அமைய உள்ளது.
  • வடகிழக்கு பிராந்தியத்தில் நீடித்த மற்றும் வேகமான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தேவையான, பொருந்தக்கூடிய முன்னெடுப்புகளை பரிந்துரைக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளவற்றை அடையாளப்படுத்தவும் இம்மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்