மாநிலத்தில் எளிமையாகத் தொழில்புரிவதனை நோக்கி பெரிய உந்துதலை அளிப்பதற்காக ”வணிகம் முதல்“ எனும் இணையவாயிலை (Business First Portal) பஞ்சாப் மாநில அரசு துவங்கியுள்ளது.
தொழிற்துறைவாதிகளுக்கு ஓர் இடத்தீர்வைகளை (One-step solution) வழங்குவதே இந்த இணையவாயிலின் நோக்கமாகும். அனைத்து அரசுத் துறைகளின் ஒழுங்குமுறை அனுமதிகள் இந்த இணைய வாயிலில் ஒருங்கிணைக்கப்படும்.
மேலும் இந்த இணைய வாயிலானது முதல் முறையாக வர்த்தகர்களுக்கு சுய மதிப்பீட்டு வசதியினை வழங்குகின்றது. இந்த வசதியானது விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை மதிப்பிட்டு ஆய்வு செய்திட வகை செய்யும்.
மேலும் பஞ்சாப் மாநில அரசானது 2018-ஆம் ஆண்டு இறுதியில் அனைத்து தொழிற்துறைவாதிகளுக்கும் 100 சதவீதம் மதிப்புக் கூட்டு வரியினை திரும்ப அளிப்பதை உறுதி செய்துள்ளது.