டெல்லி அரசானது நகரில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக தரப்படுத்தப்பட்ட எதிர்ப்புச் செயல்திட்டத்தை வகுத்துள்ளது.
வண்ணக் குறியீட்டு முறையிலான தரப்படுத்தப்பட்ட எதிர்ப்புச் செயல்திட்டமானது டெல்லியில் தடுப்பு நடவடிக்கைகளை அறிவிப்பதில் நிலவும் நிர்வாக தாமதங்களை தடுக்கும்.
அரசினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளானது மஞ்சள், ஆம்பர், ஆரஞ்ச் மற்றும் சிவப்பு போன்ற வண்ணக் குறியீட்டு முறையிலான எச்சரிக்கை அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
மஞ்சளானது மிகக் குறைந்த நிலையிலான எச்சரிக்கை ஆகும்.
சிவப்பு எச்சரிக்கையானது நகரை முழு ஊரடங்கின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு உச்சக் கட்ட எச்சரிக்கை ஆகும்.