உத்தரகாண்ட் மாநில முதல்வரான தீரத் சிங் ராவத் அவர்கள் முதலமைச்சர் வத்சல்ய யோஜனா எனும் திட்டத்தை அறிவித்தார்.
இது கோவிட் – 19 தொற்றினால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், அக்குழந்தைகளின் 21வது வயது வரை அவர்களின் பராமரிப்பு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி போன்றவற்றிற்கான செலவுகளை அரசே ஏற்கும்.
இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதத்திற்கு 3000 ரூபாய் தொகையானது பராமரிப்பிற்கான கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் அறிவித்தார்.