TNPSC Thervupettagam

வருணாஸ்திரா நீர்மூழ்கி ஏவுகணை

November 30 , 2020 1367 days 667 0
  • வருணாஸ்திரா என்ற ஏவுகணையானது விசாகப் பட்டினத்தில் அமைந்துள்ள அதன்  உற்பத்தி நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் இந்தியக் கடற்படையிடம் வழங்கப் பட்டுள்ளது.
  • வருணாஸ்திரா என்பது இந்தியாவின் முதலாவது கனரக நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.
  • இது வெடிக்கும் ஆயுதங்களுடன் கூடிய ஒரு நீர்மூழ்கி ஏவுகணை வகையாகும்.
  • இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி ஏவுகணை இதுவாகும்.
  • இது இந்தியாவின் ஒரு மேம்படுத்தப்பட்ட கனரக நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
  • நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணையான  இது மின்சாரத்தால் இயக்கப் படுகின்றது.
  • மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையானது 40 கிலோ மீட்டர் தூர வரம்பைக் கொண்டுள்ளது.
  • இது 250 கிலோ கிராம் எடையுள்ள ஆயுதங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
  • இது விசாகப் பட்டினத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தியப் பாதுகாப்புத் தொழிற்துறையின்படி, புவியிடங்காட்டி அடிப்படையிலான உதவி செய்தலைக் கொண்ட உலகின் ஒரே நீர்மூழ்கி ஏவுகணை இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்