TNPSC Thervupettagam

வருமான வரி செலுத்துவோர் மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம்

August 14 , 2022 706 days 336 0
  • வருமான வரி செலுத்துவோர் அக்டோபர் 01 முதல் அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமான அடல் ஓய்வூதியத் திட்டத்தில் (APY) இணைவதற்கு இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • 2015 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் தேதியன்று அரசாங்கம் அடல் ஓய்வூதியத் திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.
  • இது முக்கியமாக அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளச் சந்தாதாரர்களுக்கு அவர்கள் 60 வயதை அடைந்த பிறகு, அவர்கள் அளித்தப் பங்களிப்புகளின் அடிப்படையில் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியமாக மாதம் ₹1,000 முதல் ₹5,000 வரை வழங்கப்படும்.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதிக்கு முன்பாக இத்திட்டத்தில் சேர்ந்த அல்லது இணைந்தச் சந்தாதாரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்