2023 ஆம் ஆண்டு வரைவு விமான மசோதாவானது தற்போதுள்ள 1934 ஆம் ஆண்டு விமானச் சட்டத்தினை மறு ஆய்வு செய்து உருவாக்கப்பட்டது.
இது பொது மக்களின் ஆலோசனை வழங்கீடுகளுக்காக வேண்டி 30 நாட்களுக்கு பொது வெளியில் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும் அதனைக் கட்டுப் படுத்துவதற்குமான பல்வேறு சிறந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கான ஒரு சட்டத்தினை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.