“பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த உலகளாவிய அறிக்கை : வறட்சி குறித்த சிறப்பு அறிக்கை 2021” என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தினால் வெளியிடப் படுகிறது.
இது உறுப்பினர்கள் மாநாடு 26 எனப்படும் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா. பருவநிலை பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாகும்.
உறுப்பினர்கள் மாநாடு 26 ஆனது 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.
வறட்சியானது, எந்த ஓர் அவசர நடவடிக்கையும் எடுக்காவிட்டால் அடுத்த பெருந் தொற்றாக மாறக் கூடிய ஒரு மறைமுகமான உலக நெருக்கடியாக திகழும் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில் சுமார் 1.5 பில்லியன் மக்கள் வறட்சியினால் நேரடியாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
பொருளாதார இழப்பானது தோராயமாக 124 பில்லியன் டாலராக கணக்கிடப் பட்டு உள்ளது.