TNPSC Thervupettagam

வறட்சி நிலையை ஆய்வு செய்வதற்கான வலைதளம் மற்றும் செயலி

October 9 , 2018 2111 days 558 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் மழைப்பொழிவு, பயிர் நிலைமைகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் தரவுகளை சேகரிப்பதன் மூலம் வறட்சி நிலைமையைப் பகுப்பாய்வு செய்வதற்காக கைபேசி செயலி மற்றும் வலைதளத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • ‘மஹா மதத்’ என்ற இணைய தளத்தை மகாராஷ்டிரா தொலை உணர்வி பயன்பாட்டு மையத்தின் (MRSAC - Maharashtra Remote Sensing Application Centre) உதவியுடன் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசால் வழங்கப்பட்ட இரண்டு வரைமுறைகளைக் கொண்டு இந்த பிராந்தியமானது வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எந்தவொரு பகுதியையும் 21 நாட்கள் கால அளவில் மழைப்பொழிவு இல்லையெனில் வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கமுடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்