TNPSC Thervupettagam

வறட்சி முன்கணிப்பு கருவிப்பெட்டி

September 13 , 2019 1773 days 688 0
  • புது தில்லியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் (United Nations Convention to Combat Desertification - UNCCD) உள்ள உறுப்பு நாடுகளின் 14வது மாநாட்டின் போது வறட்சிக் கருவிப் பெட்டி அதிகாரப் பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
  • நாடுகளால் தங்கள் பிராந்தியங்களில் ஏற்படும் வறட்சி அபாயங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்கு இதைப் பயன்படுத்த முடியும்.
  • இது வெவ்வேறு புவியியல் பகுதிகளில் வறட்சியினால் ஏற்படும் பாதிப்புகளைத் துல்லியமாக மதிப்பிடும் திறன் கொண்டது.
  • இந்தக் கருவிப் பெட்டியானது மண்ணின் ஈரப்பதம், மழை பற்றிய தரவு மற்றும் தற்போதைய &  கடந்த கால வெப்பநிலை குறித்தத் தரவு உள்ளிட்ட 30 அளவுருக்களைப் பயன்படுத்துகின்றது.
  • உலக வங்கி ஆய்வின்படி, பொதுவாக  வறட்சியைக் கணிப்பது கடினமான செயலாகும். இது வெள்ளத்தை விட நான்கு மடங்கு பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்