அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையத்தின் அறிக்கையின்படி, பூமியில் வாழும் 77 பேரில் ஒருவர் வலுக்கட்டாயமாக இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர்.
துன்புறுத்தல், மோதல்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் பொது ஒழுங்கைக் கடுமையாகச் சீர்குலைக்கும் நிகழ்வுகள் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 103 மில்லியனாக உயர்ந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் 25.7 மில்லியனாக இருந்த உலகளாவிய அகதிகள் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பினை தேடும் மக்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்து 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 32 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில், உலகின் அனைத்து அகதிகளில் பாதிக்கும் மேற் பட்டவர்கள் (56 சதவீதம்) சிரியா, வெனிசுலா அல்லது உக்ரேனிய நாட்டவர்கள் ஆவர்.