TNPSC Thervupettagam

வளங்காப்பகங்களில் அல்லாத புலிகளின் கண்காணிப்பு

April 23 , 2025 17 hrs 0 min 38 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம் ஆனது "வளங் காப்பகங்களுக்கு வெளியே காணப்படும் புலிகளைக் கண்காணிப்பதற்கான"  பகுதிகளின் எல்லைகளை முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
  • இது மனித-விலங்கு மோதலைக் குறைப்பது மற்றும் வேட்டையாடலைத் தடுக்க என்று புலிகள் வளங்காப்பகங்களுக்கு வெளியே காணப்படும் புலிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவது ஆகிய இரண்டு முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளது.
  • நாட்டின் மதிப்பிடப்பட்ட மொத்தம் 3,682 புலிகளில், சுமார் 30 சதவீதப் புலிகள் ஆனது அறிவிக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே காணப்படுகின்றன.
  • தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையமானது (NTCA) இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
  • NTCA ஆனது இதற்காக 10 மாநிலங்களில் 80 வனப் பிரிவுகளை அடையாளம் கண்டு உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் பதிவான புலிகள்-மனிதர்கள்  மோதலில் 378 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு இந்த மோதல்களில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 110 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்