வளர்ப்பு மாடுகளைக் காடுகளுக்குள் அனுமதித்தல் தொடர்பான தீர்ப்பு
March 12 , 2022 864 days 369 0
தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என மாநில வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
வனங்களை வனவிலங்குகளுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றுவதற்கும், வளர்ப்பு மாடுகள் அங்கு உள்நுழைவதால் அவை எதிர்கொள்ளும் பல்வேறு அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் வேண்டி இந்தத் தீர்ப்பானது வழங்கப் பட்டுள்ளது.