TNPSC Thervupettagam

வாகனங்களில் திறன் பயிற்சி முன்னெடுப்பு

September 23 , 2023 303 days 228 0
  • மத்திய அரசானது ‘வாகனங்களில் திறன் பயிற்சி’ என்ற முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இது சுமார் 60,000 இளையோர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இண்டஸ்இந்த் வங்கி மற்றும் NSDC ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திறன் பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • தற்போதையப் பணிச் சந்தைக்கு ஏற்றவாறு இளையோர்களைப் பயிற்றுவிக்கச் செய்வதற்காகவும், தயார்படுத்துவதற்காகவும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்குப் பயணிக்கும் ‘நவீனமயமாக்கப்பட்ட கருவிகளைக் கொண்ட தனிப் பயனாக்கப் பட்ட பேருந்தின்' மூலமாக இந்த முன்னெடுப்பானது செயல்படுத்தப்படும்.
  • இளையோர்கள், குறிப்பாக பெண்களுக்கு, தற்போதைய பணித் துறையில் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அவசியமான ஒன்றான முக்கிய எண்ணிமத் திறன்களில் பயிற்சி வழங்கப்படும்.
  • இந்தத் திட்டமானது ஐந்தாண்டு காலத்திற்குச் செயல்பாட்டில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்