TNPSC Thervupettagam

வாகிர் நீர்மூழ்கிக் கப்பல்

November 16 , 2020 1381 days 562 0
  • இந்தியக் கடற்படையானது ஐந்தாவது ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலான “வாகிர்” என்ற கப்பலை தெற்கு மும்பையின் மசகன் கப்பல்துறையில் துவக்கி வைத்து உள்ளது.
  • மணல் மீனின் பெயரையொட்டி இதற்கு வாகீர் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.
  • இது கல்வாரி வகுப்பின் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்ளுள் ஒன்றாகும்.
  • இந்த நீர்மூழ்கிக் கப்பல்களைப் பிரெஞ்சு நாட்டின் கடற்படை வடிவமைத்துள்ளது.
  • இது இந்தியக் கடற்படையின் Project-75 என்ற ஒரு திட்டத்தின் கீழ் இந்தியாவில் கட்டப் பட்டு வருகிறது.
  • ஐ.என்.எஸ் வாக்சிர் என்பது 6 ஆவது கப்பலாகும்.
  • இது இன்னும் கட்டுமானத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்