மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வயதினை 18 ஆக குறைப்பதற்குப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இது இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது ஆகும்.
இந்தக் கருத்தாக்கமானது உலகளாவிய நடைமுறைகள், இளையோர்களிடையே அதிகரித்து வரும் அரசியல் சார்ந்த கருத்துணர்வு மற்றும் இளையோர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நன்மைகள் போன்ற பல ஏராளமான சான்றுகளால் வலுப்படுத்தப் பட்ட ஒரு காரணம் என்று அக்குழு கூறியது.
எனினும், இந்தக் கருத்தாக்கத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் எதிர்க்கிறது.
இந்தப் பொறுப்புகளுக்குத் தேவையான ஒரு அனுபவமும் பக்குவமும் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் எதிர்பார்ப்பது இயல்பிற்குப் புறம்பானது என்று கண்டறியப் பட்டு உள்ளது.
2013 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டம் (திருத்தம்) என்ற சட்டத்தின் கீழ் இந்தியாவில் பாலியல் உறவு மேற்கொள்ளச் செய்வதற்கான ஒப்புதல் வயது என்பது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் 18 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
1892 ஆம் ஆண்டில், புல்மோனி தாசி என்ற 10 வயது சிறுமியின் திருமணம் வழியிலான பலாத்காரம் மற்றும் அதன் மூலமான மரணமானது பாலியல் உறவு மேற்கொள்ளச் செய்வதற்கான ஒப்புதல் வயதை 10 வயதிலிருந்து 12 ஆக உயர்த்தியது.
1949 ஆம் ஆண்டில், சிறு வயதிலேயே கர்ப்பம் தரித்தல் போன்ற பாதகமான விளைவுகள் குறித்து மகளிர் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதையடுத்து பிறகு இது 16 வயதாக உயர்த்தப்பட்டது.
2013 ஆம் ஆண்டின் குற்றவியல் (திருத்தம்) சட்டம், பாலியல் உறவு மேற்கொள்வதற்கான ஒப்புதல் வயதினை 16 வயதிலிருந்து 18 ஆக உயர்த்தியது.