TNPSC Thervupettagam

வாடிக்கையாளர் மனநிறைவு குறியீடு கணக்கெடுப்பு

July 19 , 2018 2192 days 758 0
  • நாட்டிலுள்ள 49 விமான நிலையங்களில் ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம் வாடிக்கையாளர் மனநிறைவில் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.

  • ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்திற்கு அடுத்து உதய்ப்பூர், அமிர்தசரஸ் மற்றும் டேஹ்ராடுன் விமான நிலையங்கள் உள்ளன.
  • வாடிக்கையாளர் மனநிறைவு என்பது இந்தியாவின் விமானநிலைய ஆணையத்தின் (AAI – Airports Authority of India) முக்கிய செயல்திறன் நோக்கங்களில் ஒன்றாகும். இந்தக் கணக்கெடுப்பானது போக்குவரத்து, வாகனத்தை நிறுத்துதல், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் தூய்மை போன்ற பரந்த அளவிலான அளவுருக்களைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.

ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்தா விமான நிலையம்

  • ராய்ப்பூர் மற்றும் நயா ராய்ப்பூருக்கிடையே உள்ள மானாவில் ராய்ப்பூர் சுவாமி விவேகானந்தா விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் சத்தீஷ்கரின் முதன்மையான விமான நிலையம் ஆகும்.
  • முன்னதாக இவ்விமான நிலையம் ராய்ப்பூர் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் பயணிகள் போக்குவரத்தில் 28-வது பரபரப்பான விமான நிலையமாகவும், சரக்குப் போக்குவரத்தில் 31-வது பரபரப்பான விமான நிலையமாகவும் உள்ளது.
  • பிரபலமான துறவியான சுவாமி விவேகானந்தா, தனது இளம் வயதில் ராய்ப்பூரில் இரண்டு (2) ஆண்டுகள் தங்கியிருந்தார். அவரை கௌரவிக்கும் விதமாக இவ்விமான நிலையத்திற்கு 2012 ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று சுவாமி விவேகானந்தா விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்