உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதானது வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, உக்ரைன் மீது மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக அவர் நிலையாக நின்று போராடியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப் பட்டது.
இது 1940 ஆம் ஆண்டில் சர்ச்சில் எதிர் கொண்ட நிலையைப் போன்றதாகும்.
வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதானது முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது.
வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப் போரின் போதும், 1951 முதல் 1955 ஆம் ஆண்டு வரையிலும் ஐக்கியப் பேரரசின் பிரதமராகப் பணியாற்றினார்.