இந்தியக் கடற்படையானது, 35க்கும் மேற்பட்ட விமானங்களை உள்ளடக்கிய மாபெரும் விமானந் தாங்கிப் போர்க் கப்பல் குழும (CBG) நடவடிக்கையினை அரபிக்கடலில் மேற் கொண்டது.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனக் கப்பல்களின் நடமாட்டத்திற்கு மத்தியில் அதன் செயல்பாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப் பட்ட மிகப்பெரிய செயல் விளக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
விமானந் தாங்கிப் போர்க் கப்பல் குழுமம் என்பது ஒரு விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் அதன் துணைக் கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படைப் பிரிவாகும்.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை பல்வேறு துணைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களோடுச் சேர்ந்து இந்தப் பெரும் நடவடிக்கையில் பங்கேற்றன.