TNPSC Thervupettagam

விரைவான சுகாதாரக் காப்பீட்டு உரிமை கோரல்களுக்கான பல்வேறு புதிய வழிகாட்டுதல்கள்

June 3 , 2024 45 days 92 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது, சுகாதாரக் காப்பீடு குறித்த புதிய முதன்மை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இனிமேல் காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கையைப் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் பணமில்லா அங்கீகாரம் குறித்து முடிவு செய்ய வேண்டும்.
  • மருத்துவமனையிலிருந்து வெளியேற்ற அங்கீகார கோரிக்கையைப் பெற்ற மூன்று மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் இறுதி அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
  • எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காப்பீட்டுக் கொள்கை எடுத்தவர்கள் தாமாகவே மருத்துவமனையில் இருந்து வெளியேறும் வரை காத்திருக்கச் செய்யக் கூடாது.
  • மூன்று மணி நேரத்திற்கு மேல் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், மருத்துவமனையால் வசூலிக்கப் படும் கூடுதல் தொகையினை, பங்குதாரரின் நிதியிலிருந்து காப்பீட்டு நிறுவனம் ஏற்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்