TNPSC Thervupettagam

விலங்குகளின் வலசைப் பாதை மீதான உரிமை

October 22 , 2020 1369 days 544 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது விலங்குகளின் வலசைப் பாதை மீதான உரிமையை உறுதி செய்து அந்தப் பகுதிகளில் இருக்கும் விடுதிகளை மூடுவதற்கு வழிவகை செய்யும் வகையில் நீலகிரி யானைகள் பெருவழிப் பாதை குறித்த 2011 ஆம் ஆண்டின்  மதராஸ் உயர் நீதிமன்ற ஆணையை உறுதி செய்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில், மதராஸ் உயர்நீதிமன்றமானது நீலகிரி மாவட்டத்தின் சிகுர் பீடபூமியில்யானைகள் பெருவழிப் பாதைஒன்றை அறிவிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையின் செல்லுபடித் தன்மையை உறுதி செய்தது.
  • வனப் பகுதிகள் சுருங்கி வந்த போதிலும் யானைகள் பெருவழிப் பாதையானது அதன் தனித்துவ வன வாழ்விடங்களுக்கிடையேயான பயணத்திற்கான வசதியை மேற்கொள்ளச் செய்வதன் மூலம், வாழ்வாதாரத்திற்கு வேண்டி தமது இடம்பெயரும் முறையைத் தொடர யானைகளை அனுமதிக்கின்றது.
  • இந்தப் பெருவழிப் பாதையானது வாழ்விடத் தனிமையின் மீதான தாக்கத்தைக் குறைப்பதன் மூலம் வனவிலங்குகளின் நீடித்த நிலைத் தன்மையில் ஒரு முக்கியப் பங்கினை ஆற்றுகின்றது.
  • நீலகிரி யானைகள் பெருவழிப் பாதையானது மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளை இணைக்கும் பகுதியான சூழலியல் ரீதியில் மிகுந்த பலவீனமான பிரதேசமான சிகுர் பீடபூமியில் அமைந்துள்ளது.
  • இது நீலகிரி மாவட்டத்தில் முதுமலை தேசியப் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்