மகாராஷ்டிரா மாநிலத்தில் புதியதாக அமைக்கப்பட்ட அரசாங்கமானது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள ரூ.2 லட்சம் வரையிலான மதிப்பு கொண்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால் மகாராஷ்டிரா மாநிலமானது கடந்த இரண்டரை ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை விவசாயக் கடன் தள்ளுபடியை வழங்கியுள்ள ஒரே மாநிலமாக உருவெடுத்துள்ளது.
2008-09 ஆம் ஆண்டில், மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது நாடு முழுவதற்கும் கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்திருந்தது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் இது போன்ற பிற மாநிலங்கள் சமீப காலங்களில் இதே போன்ற திட்டங்களை அறிவித்துள்ளன.