குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு 384 வீரதீர விருதுகள் மற்றும் இதர ராணுவ விருதுகளை வழங்கினார்.
இராணுவ நடவடிக்கைகளின் போது தனித்துவம் மிக்கப் பங்களிப்பினை வெளிப் படுத்திய வீரர்களுக்கு 12 சௌர்ய சக்கர விருதுகளையும் அவர் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உதவித் துணை ஆய்வாளர் பாபு ராம் என்பவருக்கு (மரணத்திற்குப் பின்) குடியரசுத் தலைவர் அவர்கள் அசோக் சக்ரா விருதை வழங்கச் செய்தார்.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்ற ஒரு நடவடிக்கையின் போது பாபு ராம் ஸ்ரீநகரில் மூன்று பயங்கரவாதிகளைக் கொன்றார்.
அசோக் சக்ரா என்பது இந்தியாவின் மிக உயரிய அமைதிக் கால வீரதீர விருதாகும்.
கீர்த்தி சக்ரா என்பது இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதிக் கால வீரதீர விருதாகும்
சௌர்ய சக்ரா என்பது இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய அமைதி கால வீரதீர விருதாகும்.