TNPSC Thervupettagam

வீரதீரச் செயலுக்கான தேசிய விருது

January 5 , 2019 2036 days 570 0
  • மணிப்பூரின் வாஹென்பாம் லாம்கான்பா (15) வீர தீரச் செயலுக்கான தேசிய விருதுக்காக இந்திய குழந்தைகள் நல வாரியக் குழுவால் (Indian Council for Child Welfare-ICCW) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் இரண்டரை வயதான தமது நெருங்கிய உறவினரின் குழந்தையைக் குளத்தில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றியதால் இந்த கௌரவத்தினைப் பெறுகிறார்.
  • இந்த விருதுகளானது ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தன்று இந்திய குழந்தைகள் நல வாரியக் குழு என்ற அமைப்பின் கீழ் வழங்கப் படுகின்றது.
  • பாரத் விருது, சஞ்சய் சோப்ரா விருது, கீதா சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொதுவான வீர தீரத்திற்கான தேசிய விருது என இந்த விருதுகள் 5 வகையாக பரவலாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்