மணிப்பூரின் வாஹென்பாம் லாம்கான்பா (15) வீர தீரச் செயலுக்கான தேசிய விருதுக்காக இந்திய குழந்தைகள் நல வாரியக் குழுவால் (Indian Council for Child Welfare-ICCW) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் இரண்டரை வயதான தமது நெருங்கிய உறவினரின் குழந்தையைக் குளத்தில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றியதால் இந்த கௌரவத்தினைப் பெறுகிறார்.
இந்த விருதுகளானது ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தன்று இந்திய குழந்தைகள் நல வாரியக் குழு என்ற அமைப்பின் கீழ் வழங்கப் படுகின்றது.
பாரத் விருது, சஞ்சய் சோப்ரா விருது, கீதா சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொதுவான வீர தீரத்திற்கான தேசிய விருது என இந்த விருதுகள் 5 வகையாக பரவலாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.