TNPSC Thervupettagam

வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அனுப்பு தல் மூலம் வரும் பணவரவு

July 10 , 2022 741 days 343 0
  • வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) தொடர்பான சில விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது.
  • வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து இந்தியர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், ஒரு வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை பெற இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
  • இதற்கான முந்தைய வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.
  • தொகை இந்த வரம்பைத் தாண்டினால், தனிநபர்கள் அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த 30 நாட்கள் என்ற வரம்பிற்குப் பதிலாக தற்போது 90 நாட்கள் ன்ற வரம்பு விதிக்கப்படும்.
  • திருத்தப்பட்ட விதிகள் ஆனது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அத்தகைய நிதியைப் பயன்படுத்துவதற்கு அவற்றால் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் குறித்து உள்துறை அமைச்சகத்திற்குத் தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்