TNPSC Thervupettagam
October 6 , 2018 2145 days 619 0
  • ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் ஆனது கீழ்க்காணும் 3 விஞ்ஞானிகளை வேதியியலுக்கான நோபல் பரிசிற்காக தேர்ந்தெடுத்துள்ளது.
    • அமெரிக்க அறிவியலாளர்களான பிரான்செஸ் அர்னால்டு மற்றும் ஜார்ஜ் ஸ்மித்
    • பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரான கிரிகோரி வின்டர்.
  • புதிய மருந்துகள் மற்றும் உயிரி எரிபொருள்களுக்கு வழிவகுக்கக்கூடிய நொதிகள் மற்றும் எதிர்மங்களை உருவாக்குதலில் பரிமாண வளர்ச்சியின் சக்தியை மெருகேற்றியதற்காக இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த ஆண்டின் நோபல் பரிசுகளில் மூன்றாவது இடத்தை வேதியியலானது பிடித்துள்ளது.
  • 117 ஆண்டு கால வரலாற்றில் வேதியியல் நோபல் பரிசை வென்ற 5 வது பெண்மணி பிரான்செஸ் அர்னால்டு ஆவார்.
  • புரதங்கள் உருவாக்குவதற்கு புதிய வழிகளை ஜார்ஜ் ஸ்மித்தும், வளரும் எதிர்மங்களை உருவாக்க புதிய வழிகளை கிரிகோரி வின்டரும் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்