2023 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி G. பாவெண்டி, லூயிஸ் E. புரூஸ் மற்றும் அலெக்ஸி I. எகிமோவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்து தொகுத்த இவர்களின் தொகுப்புக்காக என்று அவர்களுக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், வண்ணப்பூச்சு பூசப்பட்ட கண்ணாடியில் அளவு சார்ந்த குவாண்டம் விளைவுகளை உருவாக்குவதில் டாக்டர் எகிமோவ் வெற்றி பெற்றார்.
1983 ஆம் ஆண்டில், டாக்டர் புரூஸ் மற்றும் அவரது சகாக்கள் ஒரு படி மேலே சென்று, கண்ணாடிக்குப் பதிலாக, திரவக் கரைசலில் அது போன்ற படிகங்களைத் உருவாக்கினர்.
இறுதியாக, 1993 ஆம் ஆண்டில், டாக்டர் பாவேண்டி மற்றும் அவரது சக பணியாளர்கள் இந்த தனித்துவமான அதாவது, குவாண்டம் புள்ளிகள் - நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகள் மற்றும் உயர் ஒளியியல் தரத்துடன் கூடிய படிகங்களை உருவாக்குவதற்காக ஒரு நுட்பத்தை உருவாக்கினர்.
இந்த நுண் துகள்கள் மின்னணுவியல், மேம்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் குவாண்டம் கணினி முறை போன்ற துறைகளில் பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன.
குவாண்டம் புள்ளிகள் சில நானோமீட்டர்கள் அகலம் கொண்ட துகள்கள் ஆகும்.
அவற்றின் சிறிய அளவு காரணமாக அவை தனித்துவமான ஒளியியல் பண்புகளை கொண்டுள்ளன.
அவற்றின் அமைப்பு மற்றும் அணுக் கட்டமைப்பு பெரிய அளவிலான பொருட்களைப் போலவே இருக்கும், ஆனால் பெரிய அளவிலான பொருட்களின் பண்புகள் அவற்றின் அளவைப் பொறுத்தது அல்ல.
குவாண்டம் புள்ளிகள் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் கலன்களில் ஆற்றல் உட்கிரகிப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக வேண்டி ஒளிமின்னழுத்த கலன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.