பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இமானுவேல் சர்பென்டையர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டோட்னா ஆகியோருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேதியிலுக்கான நோபல் பரிசானது வழங்கப் படுகின்றது.
இவர்கள் சிஆர்ஐஎஸ்பிஆர் எனப்படும் மரபணு மாற்றம் குறித்த ஒரு முறையின் வளர்ச்சிக்காக அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.
சிஆர்ஐஎஸ்பிஆர் என்பது முறையாகத் தொகுக்கப்பட்ட இடைவெளி கொண்ட மீண்டும் ஏற்படும் சிறு பாலின்ட்ரோம் (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats - CRISPR) என்பதைக் குறிக்கின்றது. இது 2012 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
இது மரபணு மாற்றத்தை மிகவும் எளிய முறையில் மாற்றுவதையும் அதே வேளையில் மிகவும் திறனுள்ளதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதனை விரும்பத்தகாத மரபணு மாற்றத்தின் மூலம் ஏற்படும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வாகப் பயன்படுத்த முடியும்.
வரலாற்றில் முதன்முறையாக வேதியியல் நோபல் பரிசானது பெண்கள் இருவருக்கு இணைந்து வழங்கப் பட்டுள்ளது.