அரசானது, 2020 ஆம் ஆண்டு மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகளில் இரண்டு மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இது ஒரு நாளில் பல்வேறு மின்சாரப் பயன்பாட்டு வீதங்களைக் கொண்டு கணக்கிடப் படும் முறை (ToD) மற்றும் திறன்மிகு மீட்டர்களின் ஒழுங்குமுறைப்படுத்தச் செய்தல் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது.
இது வழக்கமான கட்டணத்தை விட குறைந்தது 20 சதவீதம் குறைவாக இருக்கும் .
அதே சமயம், வணிகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர்களுக்கு விதிக்கப்பட்ட சாதாரணக் கட்டணத்தை விட குறைந்த பட்சம் 20 சதவிகிதம் அதிகமாகவும், மற்ற நுகர்வோருக்கு விதிக்கப் பட்டக் கட்டணத்தை விட குறைந்தபட்சம் 10 சதவிகிதம் அதிகமாகவும் இருக்கும்.
பகல் நேரத்தில், மின் கட்டணமானது 20% வரை குறையக் கூடும், இதனால் நுகர்வோர் பயனடைவார்.
இது மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உச்சநிலை மின் தேவையைச் சமன்படுத்த உதவும்.
இது நுகர்வோர் தங்கள் நுகர்வுகளை ஒழுங்குமுறைப் படுத்தி மேலாண்மை செய்து, நுகர்வோர் தங்கள் கட்டண உயர்வினை கட்டுப்படுத்தச் செய்வதற்குமான திறனை வழங்குகிறது.
குறைந்தது 17 ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட சுமார் 20 நாடுகள், ஒரு குறிப்பிட்ட வடிவிலான அல்லது மற்றொரு வகையிலான நேர அடிப்படையிலான பல மின்சார கட்டணக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.