TNPSC Thervupettagam

வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகம் சாதனை

April 20 , 2021 1221 days 624 0
  • இப்போது முடிவடைந்த நிதியாண்டில் (2020-21) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அமல்படுத்துவதில் தமிழகம் சாதனை படைத்துள்ளது.
  • நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலத்தில் உருவாக்கப்பட்ட தனிநபர் பணி நாட்கள் 30 கோடியைத் தாண்டி உள்ளது.
  • இது 33.4 கோடி தனிநபர் பணி நாட்களைக் கொண்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில், மாநிலத்திற்கு 27 கோடி தனிநபர் பணி நாட்கள் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்து இருந்தது.
  • பின்னர், அது அந்த இலக்கை 32 கோடி தனிநபர் பணி நாட்களாகத் திருத்தியது.
  • கடந்த ஆண்டு தனிநபர் பணி நாட்கள் இலக்கை மிஞ்சிய மாவட்டங்களில் சேலமும் ஒன்றாகும், இது 1.12 கோடி என்ற அங்கீகரிக்கப் பட்ட தனிநபர் பணி நாட்களுக்கு எதிராக சுமார் 1.24 கோடி தனிநபர் பணி நாட்களை உருவாக்கியுள்ளது.
  • இயற்கை வள மேலாண்மை, நீர்ப் பாதுகாப்பு மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றில் காஞ்சீபுரத்தின் செயல்திறன் சிறப்பாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்