TNPSC Thervupettagam

வேலைப் போக்கு குறியீடு 2024

May 15 , 2024 64 days 180 0
  • மைக்ரோசாப்ட் மற்றும் லிங்க்ட்இன் ஆகியவை 2024 ஆம் ஆண்டிற்கான வேலைப் போக்கு குறியீட்டு வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகெங்கிலும் மக்களின் வேலை செய்யும் பாங்கு, வழி நடத்தும் திறன் மற்றும் பணியமர்த்தும் பாங்கு ஆகியவற்றில் ஒரு தாக்கத்தினை உண்டாக்குகிறது.
  • கடந்த ஆறு மாதங்களில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு "கிட்டத்தட்ட இரு மடங்காக" அதிகரித்துள்ளது.
  • 79 சதவீத நிறுவனங்கள் "போட்டித் தன்மை நிறைந்ததாக இருப்பதற்குச் செயற்கை நுண்ணறிவு ஏற்பு மிகவும் முக்கியமானது" என்று ஒப்புக் கொண்டாலும், 59 சதவீத நிறுவனங்கள் "செயற்கை நுண்ணறிவின் உற்பத்தித் திறன் சார்ந்த ஆதாயங்களைக் மதிப்பிடுவது பற்றி கவலை தெரிவித்துள்ளனர்".
  • இந்த அறிக்கையின்படி, 75 சதவீத மக்கள் தங்களது வேலைகளில் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்துகின்றனர் என்ற நிலையில் அவர்களில் 46 சதவீதம் பேர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே செயற்கை நுண்ணறிவினைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
  • முதலாளிகளின் பார்வையில், 66 சதவீத நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் இல்லாத ஒருவரைப் பணியமர்த்த மாட்டோம் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்