2021 ஆம் ஆண்டில் வேளாண்துறை அமைச்சகமானது 10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் கூடுதலாக 1,100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை நிறுவச் செய்வதற்கான ஒரு பணியைத் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்திற்கு (NCDC) வழங்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கும் 33 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலும் தொழில்துறைத் தொகுப்பு வணிக நிறுவனம் (CBBO) சார்ந்த வேளாண் உற்பத்தியாளர் அமைப்பு (FPO)ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய்நிதி உதவியாக வழங்கப் படுகிறது.
இம்முயற்சி விவசாயிகளுக்குத் தேவையானச் சந்தை இணைப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்யும்.