TNPSC Thervupettagam

வேளாண் நிலங்களில் வன விலங்குகளின் அச்சுறுத்தல்

November 11 , 2023 252 days 185 0
  • வனவிலங்கு மோதல்களால் விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரங்களைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவானது, தமிழ்நாட்டில் வேளாண் நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிப்பதற்காக காணொளி வாயிலான சந்திப்பினை நடத்தியது.
  • 19 பேர் கொண்ட குழுவின் இந்த முதல் கூட்டத்தில், ஈரோடு, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காட்டுப்பன்றிகள், மயில்கள், யானைகள் மற்றும் சில சமயங்களில் குரங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் குறித்து தங்கள் கவலைகளைத் தெரிவித்தனர்.
  • இந்தக் குழு கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு களப் பார்வையை மேற்கொண்டு அவற்றின் வனவிலங்கு, குறிப்பாக காட்டுப்பன்றிகளின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கான மேலாண்மை உத்திகளை மதிப்பீடு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்