தில்லியின் முன்னாள் முதல்வர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான ஷீலா தீக்சித் ஜூலை 20 ஆம் தேதி புது தில்லியில் காலமானார். அவருடைய வயது 81 ஆகும்.
இவர் நீண்ட காலம் முதலமைச்சராகப் பதவி வகித்தவர்களில் ஒருவராவார். எந்தவொரு இந்திய மாநிலங்களிலும் இல்லாத வகையில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் முதலமைச்சர் இவராவார். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை மொத்தம் 15 ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
இவர் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி கேரளாவின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். ஆனால் இவர் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று ஆளுநர் பதவியிலிருந்து விலகினார்.
2010 ஆம் ஆண்டில் இவருடைய ஆட்சிக் காலத்தில் முதன்முறையாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டன.