கேரள அரசானது, ‘ஷைலி’ எனப்படும் ஒரு ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
இது கேரள மாநில மக்களிடையே நிலவும் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
நவ கேரள கர்மா என்ற திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையினால் தொடங்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையிலான பரிசோதனைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.