June 24 , 2022
760 days
395
- இவர் ஆக்சிஜன் உதவியின்றி அன்னபூர்ணா மலையின் உச்சியில் ஏறிய இந்தியாவின் முதல் மலையேறும் வீரர் ஆவார்.
- ஸ்கல்சாங் ரிக்சின் ஆக்ஸிஜன் உதவியின்றி இரண்டு மலைச் சிகரங்களிலும் ஏறிச் சாதனை படைத்துள்ளார்.
- 16 நாட்கள் இடைவெளியில், ஏப்ரல் 28 அன்று அன்னபூர்ணா மலையில் ஏறியும் மே 14 அன்று லோட்சே மலையில் ஏறியும் இந்தச் சாதனையானது மேற்கொள்ளப்பட்டது.
- அன்னபூர்ணா என்பது வட-மத்திய நேபாளத்தின் கண்டகி மாகாணத்தின் அன்ன பூர்ணா மலைத் தொடரில் அமைந்துள்ள ஒரு மலையாகும்.
- இது கடல் மட்டத்திலிருந்து 8,091 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உலகின் பத்தாவது உயரமான மலையாகும்.
- இந்த மலைச்சிகரத்தில் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்வதால் இது கில்லர் மவுண்டன் என்றும் அழைக்கப் படுகிறது.
Post Views:
395