TNPSC Thervupettagam
June 2 , 2020 1512 days 640 0
  • விண்வெளிக்கு விண்வெளி  வீரர்களை அனுப்பிய முதலாவது தனியார் விண்வெளிக்கலன் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் ஆகும்.
  • ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி வீரர்கள் திட்டமானது விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு தொகுதியானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் (ISS - International Space Station) நுழைந்ததையடுத்து தனது முதலாவது பயணத்தை நிறைவு செய்துள்ளது.
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது டவுக் ஹர்லே மற்றும் பாப் பென்கென் ஆகியோரை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
  • இந்த திட்டமானது ரஷ்யாவின் விண்வெளி ராக்கெட்டுகளை நாசா சார்ந்திருத்தலை முடிவுக்குக் கொண்டு வர இருக்கின்றது.
  • விண்வெளியிலிருந்து விண்வெளிக் கலன்களைப் பூமிக்கு மீண்டும் திருப்பிக் கொண்டு வந்த உலகின் முதலாவது தனியார் நிறுவனம்  ஸ்பேஸ்எக்ஸ் ஆகும்.
  • விண்வெளி வீரர்கள் “எண்டீவியர்” என்ற ஒரு ஓய்வு பெற்ற விண்கலன் ஒன்றின் நினைவாக இந்த வணிக ரீதியிலான விண்கலத்திற்கு அப்பெயரிட்டுள்ளனர்.
  • ISS என்பது தாழ் புவி வட்டப் பாதையில் நிலை கொண்டுள்ள ஒரு கூறுநிலை விண்வெளி நிலையமாகும். (வசிக்கத் தக்க நிலை கொண்ட ஒரு செயற்கையான செயற்கைக் கோள்)
  • விண்வெளியில் உள்ள மிகப்பெரிய செயற்கைப் பொருள் இதுவாகும். புவி தாழ் சுற்றுவட்டப் பாதையில் உள்ள மிகப்பெரிய செயற்கைக் கோள் இதுவாகும். இதை பூமியிலிருந்து வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.
  • ISS ஆனது ஏறக்குறைய 93 நிமிடங்களில் பூமியைச் சுற்றி வருகின்றது. இது ஒரு நாளைக்கு 15.5 முறை பூமியைச் சுற்றி வருகின்றது.
  • ISS திட்டம் என்பது பின்வரும் 5 விண்வெளி நிறுவனங்களுக்கிடையேயான ஒரு தேசிய அளவிலான பலதரப்பு கூட்டுத் திட்டமாகும்.
    • நாசா (அமெரிக்கா)
    • ரோஸ்கோஸ்மாஸ் (ரஷ்யா)
    • ஜாக்சா (ஜப்பான்)
    • EAS (ஐரோப்பா)
    • CSA (கனடா)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்