உலகின் மிகப்பெரிய நகர்ப்புற ஸ்வச்சதா கணக்கெடுப்பின் 8வது பதிப்பான ஸ்வச் சர்வேக்சன் 2023 - மேரா ஷெஹர், மேரி பெஹ்சான் தொடங்கப் போகிறது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA), 2023 ஆம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்சன் ஆய்வின் கள மதிப்பீட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான ஸ்வச் சர்வேக்சன் என்பதின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் கள மதிப்பீட்டிற்காக சுமார் 3,000 மதிப்பீட்டாளர்கள் களத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த மதிப்பீட்டாளர்கள் 46 குறிகாட்டிகளுடன் 4500+ நகரங்களின் செயல்திறனை ஆய்வு செய்வார்கள் என்பதோடு இந்தக் கணக்கெடுப்பு சுமார் ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.